அரசு பஸ் மோதி வாலிபர் சாவு


அரசு பஸ் மோதி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 28 Jun 2023 12:15 AM IST (Updated: 28 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அருகே அரசு பஸ் மோதி வாலிபர் பலியானார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே உள்ள சத்திரக்குடி எஸ்.வி.புரம் பகுதியை சேர்ந்தவர் கருவாசகம் என்பவரின் மகன் கண்மணிராஜன் (வயது 29). மேளம் அடிக்கும் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை சத்திரக்குடியில் இருந்து ராமநாதபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதி படுகாயமடைந்த கண்மணிராஜன் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி பவித்ரா (24) அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story