விபத்தில் வாலிபர் சாவு


விபத்தில் வாலிபர் சாவு
x

திண்டுக்கல் அருகே விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

திண்டுக்கல்

திண்டுக்கல்லை அடுத்த கொட்டப்பட்டி பிரிவு அருகே, பழனி பைபாஸ் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பள்ளபட்டி கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக், புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்?, எதற்காக அவர் அங்கு வந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story