வாகனம் மோதி வாலிபர் பலி


வாகனம் மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 6 Oct 2023 6:45 PM GMT (Updated: 6 Oct 2023 6:45 PM GMT)

வீரபாண்டி அருகே வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.

தேனி

வீரபாண்டியை அடுத்த எஸ்.பி.எஸ் காலனி பஸ் நிறுத்தம் அருகே சுமார் 35 வயது வாலிபர் ஒருவர் முகம் சிதைந்த நிலையில் இறந்து கிடந்தார். அவரது அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில், மோட்டார் சைக்கிளில் சென்றபோது அந்த வழியாக வந்த வாகனம் மோதியதில் அவா் இறந்தது தெரியவந்தது. அவர் யார்? என்று தெரியவில்லை. இதுகுறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story