வாலிபருக்கு கத்திக்குத்து; 3 பேர் கைது


வாலிபருக்கு கத்திக்குத்து; 3 பேர் கைது
x
தினத்தந்தி 4 Oct 2023 12:15 AM IST (Updated: 4 Oct 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

வாலிபரை கத்தியால் குத்திய 3 பேரை கைது செய்தனர்.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை தாலுகா கிடங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜலிங்கம். இவர் கடந்த ஆண்டு ஆண்டாவூரணி கிராமத்தைச் சேர்ந்த கவுதமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். கணவன், மனைவி இருவரும் கோவையில் வசித்து வந்தநிலையில் அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் கவுதமி கோபித்து கொண்டு ஊருக்கு வந்துவிட்டாராம். ராஜலிங்கம் கிடங்கூர் கிராமத்தில் தாயாருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் ராஜலிங்கம், கவுதமியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு அவரது தந்தையிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கு தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

இதற்கிடையே கவுதமியின் அண்ணன் காளிமுத்து மற்றும் சிலர் சென்று ராஜலிங்கத்திடம் தகராறு செய்தனர். ேமலும் காளிமுத்து, மாரியப்பன் ஆகியோர் கத்தியால் ராஜலிங்கத்தை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் தப்பி சென்று விட்டனர். படுகாயம் அடைந்த ராஜலிங்கம் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து எஸ்.பி.பட்டினம் போலீசார், காளிமுத்து, மாரியப்பன்(20), பிரதீப்(24), திருப்பாகோட்டை அஜித்(27), சுரேஷ்(24) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து பிரதீப், அஜித், சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.

1 More update

Next Story