கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு


கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
x

கோவில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடைபெற்றது.

கரூர்

தோட்டக்குறிச்சி சேங்கல் மலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற சொர்ண பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சுவாமிக்கு பால், இளநீர், பன்னீர், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.இதேபோல் நன்செய் புகழூர் மேகபாலீஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் வேலாயுதம்பாளையம், நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோவில்களிலும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

1 More update

Next Story