பிரதோஷத்தையொட்டிசிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


பிரதோஷத்தையொட்டிசிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 17 May 2023 7:00 PM GMT (Updated: 17 May 2023 7:00 PM GMT)
நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் வளர்பிறை பிரதோஷத்தையொட்டி நேற்று சிவன் மற்றும் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. அதன்படி பரமத்திவேலூர் அருகே பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், எல்லையம்மன் கோவிவில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் மற்றும் கோப்பணம்பாளையம் பரமேஷ்வரர், பிலிக்கல்பாளையம், கரட்டூர் விஜயகிரி வடபழனியாண்டவர் கோவிலில் எழுந்தருளியுள்ள பர்வதீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story