உடுமலை அருகே பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து...!


உடுமலை அருகே பஞ்சு மில்லில் பயங்கர தீ விபத்து...!
x

உடுமலை அருகே பஞ்சு மில்லில் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்து உள்ளது.

திருப்பூர்


திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ளது உரல்பட்டி. இங்கு அருண்குமார் என்பவருக்கு சொந்தமான பஞ்சு மில் ஒன்று உள்ளது. இந்த மில்லில் திடீரென்று இன்று தீ பிடித்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் உடுமலை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் தீ விபத்தால் பஞ்சுகள் மற்றும் பல லட்சம் மதிப்புள்ள எந்திரங்கள் சேதமடைந்தது.

மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story