செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 3-ம் சுற்று ஆட்டம் தொடங்கியது


செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 3-ம் சுற்று ஆட்டம் தொடங்கியது
x
தினத்தந்தி 31 July 2022 10:11 AM GMT (Updated: 31 July 2022 10:12 AM GMT)

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 3-ம் சுற்று ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மாமல்லபுரம்,

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி விளையாடிய அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற 2-வது சுற்று போட்டிகளிலும் இந்திய அணி பெற்று வெற்றி பெற்றது.

இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 3-ம் சுற்று ஆட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா சார்பில் இன்றைய போட்டியில் 6 அணிகள் களமிறங்கியுள்ளன. அதில் ஆண்கள் பிரிவில் 3 அணிகளும், பெண்கள் பிரிவில் 3 அணிகளும் பங்கேற்றுள்ளன.


Next Story