உதவி தலைமை ஆசிரியரிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிப்பு


உதவி தலைமை ஆசிரியரிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிப்பு
x
தினத்தந்தி 20 Oct 2023 6:45 PM GMT (Updated: 20 Oct 2023 6:45 PM GMT)

உதவி தலைமை ஆசிரியரிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிக்கப்பட்டது.

சிவகங்கை

சிவகங்கை சோலை நகரை சேர்ந்தவர் பாலமுருகன்(வயது 33). இவர் கண்டாங்கி பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலையில் பாலமுருகன் சிவகங்கை ெரயில் நிலைய பகுதியில் நடை பயிற்சிக்கு சென்றார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 3 பேர் திடீரென கத்தியை காட்டி மிரட்டி பாலமுருகன் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலி மற்றும் மோதிரம், வெள்ளி சங்கிலி ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பிவிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் சிவகங்கை நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆதி லிங்க போஸ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


Next Story