விபத்தில் இறந்த வாலிபர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

விபத்தில் இறந்த வாலிபர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருநெல்வேலி
பாளையங்கோட்டை ஜோதிபுரத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவரின் மகன் அருண் பிரகாஷ் (வயது 21). இவர் கார் நிறுவனத்தில் எலக்ட்ரானிக் மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். இவர் தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே ஒரு காரை பழுது நீக்கம் செய்ய கார் நிறுவனம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டார். பணியை முடித்துவிட்டு திரும்பி வந்த போது மோட்டார் சைக்கிள் விபத்தில் அருண்பிரகாஷ் படுகாயம் அடைந்தார். பின்னர் சிகிச்சையில் இருந்த அவர் உயிர் இழந்தார்.
இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த வாலிபரின் உடலை வாங்க மறுத்து அவரின் உறவினர்கள், பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் போலீசாருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அருண் பிரகாசின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story






