பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது


பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது
x

பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள மரவநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா (வயது 22). இவர் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவி ஒருவரிடம் ஆசை வார்த்தை கூறி, அவரை கடந்த 10-ந் தேதி வீட்டிலிருந்து கடத்திச் சென்றுள்ளார். இது குறித்து அந்த மாணவியின் தந்தை வி.களத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மாணவியை பல்வேறு இடங்களில் தேடினர். இதில், கடத்தி செல்லப்பட்ட மாணவி ஆந்திர மாநிலம் நகரியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் மாணவியை கடத்திச் சென்ற சூர்யாவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

1 More update

Related Tags :
Next Story