காஞ்சீபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா - பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார்


காஞ்சீபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா - பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார்
x

காஞ்சீபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டாவை பயனாளிகளுக்கு கலெக்டர் டாக்டர்.மா.ஆர்த்தி வழங்கினார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர்.மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கிய மாவட்ட கலெக்டர் ஆர்த்தி பொதுமக்களிடம் இருந்து 226 கோரிக்கை மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், காஞ்சீபுரம் மாவட்டம் ஒழையூர் மற்றும் நல்லூர் கிராமத்தை சேர்ந்த 7 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுமதி, மாவட்ட ஆதிதிராவிட நலஅலுவலர் பிரகாஷ்வேல் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story