இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 29 Sep 2023 6:45 PM GMT (Updated: 29 Sep 2023 6:46 PM GMT)

வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டம்

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு நாராயணன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன் ஆகியோர் தலைமை தாங்கினர். நூறு நாள் வேலை திட்ட பணியாளா்களுக்கு 8 வாரங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடன் வழங்கவும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதியான குடும்பங்களுக்கு உரிமைத்தொகை கிடைத்திட வலியுறுத்தியும் போராட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன் உள்பட கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகக்குழுவினர் கலந்து கொண்டனர்.


Next Story