ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம், 5 மணி நேரத்திற்கு பிறகு நிறைவு


ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம், 5 மணி நேரத்திற்கு பிறகு நிறைவு
x

ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம், 5 மணி நேரத்திற்கு பிறகு நிறைவடைந்துள்ளது.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக காங்கிரஸ் கட்சியை சோ்ந்த திருமகன் ஈவெரா இருந்தார். அவர் கடந்த 4-ந் தேதி மாரடைப்பு காரணமாக திடீரென மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து அந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. தேர்தல் பணியாற்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கொண்ட பணிக்குழுவை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதோடு இல்லாமல் பூத் வாரியாக தேர்தல் பொறுப்பாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இந்த பணிகளை ஆய்வு செய்ய எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை ஈரோட்டுக்கு வந்தார். ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 238 வாக்கு சாவடிகள் உள்ளன. இதில் ஒவ்வொரு வாக்கு சாவடிக்கும் தேர்தல் பணிக்குழுவினர், தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் உள்ளூர் பொறுப்பாளர்களுடன் வீடு, வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்தனர். அவர்களிடம் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம், 5 மணி நேரத்திற்கு பிறகு நிறைவடைந்துள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 4-ம் தேதி ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.


Next Story