சென்னை தீவுத்திடலில் வரும் 12-ம் தேதி பொருட்காட்சி தொடக்கம்...!


சென்னை தீவுத்திடலில் வரும் 12-ம் தேதி  பொருட்காட்சி தொடக்கம்...!
x

வரும் 12-ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

சென்னை,

சென்னை தீவுத்திடலில் ஆண்டுதோறும் சுற்றுலா பொருட்காட்சி நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டும் பொருட்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி , 48வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை, சென்னை தீவுத்திடலில் வரும் 12-ம் தேதி மாலை 5 மணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

12, 13-ம் தேதிகளில் பொதுமக்கள் கட்டணமின்றி பொருட்காட்சியை பார்வையிடலாம். 14-ம் தேதி முதல் பெரியவர்களுக்கு ரூ.40, சிறியோருக்கு ரூ.25 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 5 வயதுக்கு குறைவானோர் பொருட்காட்சியை பார்க்க கட்டணம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story