திருவொற்றியூரில் கடலில் மீன் பிடிக்கச்சென்ற மீனவர் மாயம்


திருவொற்றியூரில் கடலில் மீன் பிடிக்கச்சென்ற மீனவர் மாயம்
x

திருவொற்றியூரில் கடலில் மீன் பிடிக்கச்சென்ற மாயமான மீனவரை தேடி வருகின்றனர்.

சென்னை

திருவொற்றியூர் குப்பத்தைச் சேர்ந்தவர் இளையராஜா (வயது 38). மீனவரான இவர், நேற்று அதிகாலை 2 மணிக்கு வேலு என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் பட்டு, சுரேஷ், சின்னப்பிள்ளை ஆகிய மேலும் 3 மீனவர்களுடன் சேர்ந்து திருவொற்றியூர் சூரை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலில் மீன் பிடிக்க சென்றார்.

கரையில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் பைபர் படகு சென்று கொண்டிருந்தபோது வேகமாக காற்று வீசியது. இதில் பைபர் படகு நிலை தடுமாறியது. அப்போது எதிர்பாராதவிதமாக இளையராஜா கடலுக்குள் தவறி விழுந்தார். உடனே சக மீனவர்கள் அவரை கடலில் இறங்கி தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை.

இதையடுத்து 3 பேரும் கரைக்கு திரும்பினர். இதுபற்றி திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடலில் மாயமான இளையராஜாவை மீனவர்கள் உதவியுடன் தேடி வருகின்றனர்.


Next Story