விபத்தில் காயமடைந்த தொழிலாளி சாவு


விபத்தில் காயமடைந்த தொழிலாளி சாவு
x

பாளையங்கோட்டையில் விபத்தில் காயமடைந்த தொழிலாளி இறந்தார்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை மேலக்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் சங்கரலிங்கம் (வயது 52). தொழிலாளி. இவர் கடந்த 13-ந்தேதி நெல்லை கே.டி.சி. நகர் பாலம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றாா். அப்போது அந்த வழியாக வந்த லோடு வேன் எதிர்பாராத விதமாக சங்கரலிங்கம் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சங்கரலிங்கம் படுகாயம் அடைந்து, சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிர் இழந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

1 More update

Next Story