லாட்டரி சீட்டு விற்றவர் சிக்கினார்


லாட்டரி சீட்டு விற்றவர் சிக்கினார்
x
தினத்தந்தி 8 July 2023 6:45 PM GMT (Updated: 9 July 2023 12:03 PM GMT)

கூடலூர் அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

லோயர்கேம்ப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தன் தலைமையிலான போலீசார் லோயர்கேம்ப் பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கையில் பையுடன் சந்தேகப்படும்படி ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து பையை சோதனை செய்தனர்.

அதில், தடை செய்யப்பட்ட 180 லாட்டரி சீட்டுகள் இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கண்டமனூர் 3-வது வார்டு கிழக்கு தெருவை சேர்ந்த ஜெயராஜ் (வயது 58) என்பதும், லாட்டரி சீட்டு விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story