ஓட்டல் உரிமையாளரை தாக்கியவர் கைது

ஓட்டல் உரிமையாளரை தாக்கியவர் கைது
மதுரை காமராஜர்சாலை மீனாட்சிபுரம் 5-வது தெருவை சேர்ந்தவர் மணிமாறன்(வயது 40). இவர் இஸ்மாயில்புரம் 19-வது தெருவில் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலில் முனிச்சாலை இஸ்மாயில்புரத்தை சேர்ந்த சையதுஇப்ராகிம்(38) கடனுக்கு சாப்பிட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று கடையில் சாப்பிட்ட பிறகு சாப்பிட்டத்தற்கு பணம் கேட்டதால் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சையதுஇப்ராகிம் கடை உரிமையாளர் மணிமாறனை கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சையது இப்ராகிம்மை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





