சிறுமியை திருமணம் செய்தவர் போக்சோவில் கைது

சிறுமியை திருமணம் செய்தவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
குளித்தலை அருகே உள்ள போத்துராவுத்தன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கருப்பையா(வயது 29). சென்ட்ரிங் வேலை செய்து வரும் இவர், கடந்த 2022-ம் ஆண்டு 16 வயதான சிறுமியை திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து கிருஷ்ணராயபுரம் வட்ட சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் சுகுணாவிற்கு தகவல் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக அவர் குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் கருப்பையா மீது குழந்தை திருமண தடுப்பு சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





