சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இளம்பெண் உயிரிழந்த விவகாரம்.. மேலும் ஒருவர் கைது


சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இளம்பெண் உயிரிழந்த விவகாரம்.. மேலும் ஒருவர் கைது
x

சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தில் மேலும் ஒருவரை போலீசார் கைதுசெய்தனர்.

சென்னை,

சென்னை அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஆனந்த் தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே மிகவும் பழமையான கட்டிடம் ஒன்றை இடிக்கும் பணி கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வந்துள்ளது.

இந்த நிலையில், நேற்று காலையும் வழக்கம்போல் ஜே.சி.பி. எந்திரம் மூலம் கட்டிடம் இடிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். அப்போது, ஜே.சி.பி. எந்திரம் கட்டிடத்தின் உள்பக்கம் இருந்து இடிக்கும் பணியை மேற்கொண்ட போது, கட்டிடத்தின் சுற்றுச்சுவர் சாலையோர நடைபாதையில் திடீரென இடிந்து விழுந்தது.

அப்போது, அந்த பக்கமாக நடந்து சென்ற ஒரு இளம்பெண் கட்டிட இடிபாடுகளில் சிக்கி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆயிரம் விளக்கு போலீசார் ஜே.சி.பி. எந்திரத்தின் உரிமையாளர் ஞானசேகர் (35), டிரைவர் பாலாஜி (25) மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோரை கைது செய்த நிலையில் இது தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் கைதுசெய்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story