எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்-அமைச்சராக்குவதே ஒரே குறிக்கோள் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ


எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்-அமைச்சராக்குவதே ஒரே குறிக்கோள் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
x

எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்-அமைச்சராக்குவதே ஒரே குறிக்கோள் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை,

மதுரையில் அதிமுக நிர்வாகிகள் வீடுகளில் தேசிய கொடியை பறக்க விடுவது தொடர்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கட்சி நிர்வாகிகளுக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது,

பிரதமர் நரேந்திர மோடியின் கருத்தை வலுப்படுத்தும் வகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி தொண்டர்களுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதன்படி வருகிற 13 -15 தேதிகளில் ஒவ்வொருவரும் தேசிய உணர்வை பிரதிபலிக்கும் வகையில் அவரவர் வீடுகளில் தேசிய கொடியை பறக்க விட வேண்டும் என்று கூறியுள்ளார்.

கொரோனா காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி வீடுகளில் விளக்கேற்றும் படி கூறினார். அதனை ஒவ்வொரு அதிமுக தொண்டனும் செய்து காட்டினர். அதுபோல இப்பொழுது தேசிய கொடியை பறக்க விடும் நிகழ்ச்சியும் சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளோம் .

அதிமுகவில் பிளவு இல்லை சிறு சிறு பாதிப்புகள் இருந்தாலும் பெரிதாக கட்சியில் சேதம் இல்லை. தினகரன் காழ்ப்புணர்ச்சி காரணமாக சில கருத்துக்களை பேசி வருகிறார். அதனை பெரிது படுத்த தேவையில்லை. சசிகலா தினகரன் போன்றவர்கள் கூறும் கருத்துகள் பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. அது எங்களுக்கு பெரிதல்ல

எங்களது ஒரே நோக்கமே மீண்டும் முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமியை கொண்டுவர வேண்டும் என்பதுதான். குதிரைக்கு கடிவாளம் போட்டால் எப்படி செல்லுமா அதுபோல திமுக என்ற அரசியல் எதிரியை வீழ்த்த நாங்கள் ஒரே குறிக்கோளோடு செயல்பட்டு வருகிறோம்.

திமுக ஆட்சியில் பொதுமக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள். தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்களிடம் எப்படி ஓட்டு கேட்பார். எனவே அதிமுக வெற்றி உறுதியாகிவிட்டது.

நடிகர் ரஜினிகாந்த் ஒரு வார்த்தை கூறினாலும் திருவாசமாக சொல்லுவார். அதுபோல இனிமேல் நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்று அவர் ஏற்கனவே சொல்லிவிட்டார். எனவே கவர்னரை ரஜினிகாந்த் சந்தித்தது பற்றி எதுவும் பேசத் தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story