மீன் வெட்டி அருவிப்பாறையில் ஏறியவர் தவறி விழுந்து சாவு


மீன் வெட்டி அருவிப்பாறையில் ஏறியவர் தவறி விழுந்து சாவு
x

மீன் வெட்டி அருவிப்பாறையில் ஏறியவர் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அய்யம்பட்டி செக்கடி தெரு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 32). இவர் நேற்று தனது குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ராக்காச்சி அம்மன் கோவிலுக்கு சென்றார். அப்போது அதேபகுதியில் உள்ள மீன் வெட்டி அருவிப்பாறை பகுதியில் உள்ள தண்ணீரில் குளிக்க தனது உறவினர்களுடன் சென்றார். அப்போது பாறை மீது ஏறி வந்த போது பாலமுருகன் திடீரென கீழே விழுந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து பாலமுருகனின் மனைவி முனீஸ்வரி மம்சாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story