கழிப்பறையில் வழுக்கி விழுந்தவர் சாவு


கழிப்பறையில் வழுக்கி விழுந்தவர் சாவு
x
தினத்தந்தி 19 Jan 2023 1:00 AM IST (Updated: 19 Jan 2023 4:02 PM IST)
t-max-icont-min-icon

கழிப்பறையில் வழுக்கி விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்.

நாமக்கல்

பரமத்திவேலூர்:-

பரமத்திவேலூர் தாலுகா சோழசிராமணி அருகே பச்சாக்கவுண்டன் வலசு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 54). கூலி தொழிலாளியான இவருக்கும், அவருடைய மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அவருடைய மனைவி பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த சுப்பிரமணி, வீட்டில் கழிப்பறையில் வழுக்கி விழுந்ததாக தெரிகிறது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்தார்.

இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சுப்பிரமணியை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சுப்பிரமணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ேஜடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

1 More update

Related Tags :
Next Story