மின்மாற்றியில் தாமிர கம்பி திருடியவர் கைது
பண்ருட்டி அருகே மின்மாற்றியில் தாமிர கம்பி திருடியவர் கைது செய்யப்பட்டார்.
கடலூர்
பண்ருட்டி,
பண்ருட்டி அருகே பணிக்கன்குப்பம் அண்ணா அரசு பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி எதிரில் உள்ள மின்மாற்றியில் இருந்த 200 லிட்டர் ஆயில் மற்றும் 80 கிலோ தாமிர கம்பிகளை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் மின்மாற்றியில் திருடியது் குறிஞ்சிப்பாடி அருகே மண்டபமேட்டுக்குப்பம் மேற்கு தெருவை சேர்ந்த துரைமாயவேல் (வயது 42) என்பது தெரிந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ரகுராமன், துரைமாயவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் அவரிடம் இருந்து 200 லிட்டர் ஆயில், 80 கிலோ தாமிர கம்பிகளை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story