பெண்ணிடம் செயினை பறித்து தப்பியோடிய கொள்ளையர்கள் - விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்...!


பெண்ணிடம் செயினை பறித்து தப்பியோடிய கொள்ளையர்கள் - விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்...!
x

திண்டுக்கல் அருகே பெண்ணிடம் செயினை பறித்து தப்பியோடிய கொள்ளையர்களை பொதுமக்கள் விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்து உள்ளனர்.

திண்டுக்கல்


திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி ஆர்கேஎஸ் தெருவில் வசிப்பவர் சதீஷ் மனைவி பாக்கியலெட்சுமி (வயது 47), இவர் இன்று மதியம் 12 மணியளவில் தனது வீட்டுக்கு வெளியே நின்றுக் கொண்டிருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்து கொண்டு 2 பேர் பைக்கில் வந்தனர்.

பக்கியலட்சுமி அருகில் வந்த இவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் பைக்கிற்கு பின்னால் அமர்ந்திருந்த ஒருவன் பாக்கியலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்து உள்ளார். பின்னர் வேகமாக பைக்கை ஓட்டிக் கொண்டு பேருந்து நிலையத்தை நோக்கி சென்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பாக்கியலட்சுமி கூச்சல் போட்டதை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து செயினை பறித்துக் கொண்டு பைக்கிள் சென்ற கொள்ளையர்களை விரட்டி சென்றனர்.

சின்னாளபட்டி பேருந்து நிலையம் வழியாக சென்று பூஞ்சோலை என்னும் இடத்தில் சென்ற போது கூட்ட நெருசலில் சிக்கி கொள்ளையர்களின் வாகனம் கீழே விழுந்தது.

இருவரும் எழுந்து ஓட முயன்ற போது துரத்தி சென்ற பொதுமக்கள் இருவரையும் பிடித்தனர். பின்னர் சரமாரியாக அடித்து உதைத்து அவர்களிடம் இருந்த பாக்கியலட்சுமியின் தங்க செயினை கைப்பற்றினர்.

தகவலறிந்து வந்த சின்னாளப்பட்டி போலீசார் இரண்டு கொள்ளையர்களையும் பொது மக்களிடமிருந்து மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story