புதிய கல்வி கொள்கையில் உரிமையை நிலைநாட்ட மாநில அரசுக்கு உரிமை உண்டு - அன்புமணி ராமதாஸ்


புதிய கல்வி கொள்கையில் உரிமையை நிலைநாட்ட மாநில அரசுக்கு உரிமை உண்டு - அன்புமணி ராமதாஸ்
x

புதிய கல்வி கொள்கையில் உரிமையை நிலைநாட்ட மாநில அரசுக்கு உரிமை உண்டு என்று பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

திண்டிவனம்,

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் அன்புமணி ராமதாஸ், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் புதுப்பொலிவுடன் உள்ள பா.ம.க. அரசியல் பயிலரங்கத்தை திறந்து வைத்து, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதற்கு டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் ஜி.கே.மணி முன்னிலை வகித்தார்.

இதைத்தெடர்ந்து பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டெல்டா பகுதி பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. எனவே பாசன வாய்க்கால் தூர்வாரும் பணியை விரைந்து முடித்திட வேண்டும். கேரளா மற்றும் கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது. இதன் மூலம் தமிழகத்துக்கு கிடைக்கும் தண்ணீரை வீணாக கடலில் கலக்க விடாமல் தடுத்து, சேமிக்க வேண்டும். நந்தன் கால்வாய் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

இந்தியாவின் ஒரே மொழி இந்தி என்கிறார்கள். இதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? . மாநில மொழி முக்கியத்துவம் வாய்ந்தது. மொழிகளில் அலுவல் மொழி, இணைப்பு மொழி என இரு வகைப்படும். நாட்டில் அலுவல் மொழி 22 உள்ளது. ஆங்கிலம் இணைப்பு மொழியாகும். எனவே எந்த ஒரு மொழியையும் திணிக்க முடியாது.

அப்படிப் பார்த்தால் தமிழ் மொழி தொன்மை வாய்ந்த மொழியாகும். எந்த மொழியையும் கற்றுக் கொள்ளலாம், ஆனால் திணிக்க கூடாது. புதிய கல்வி கொள்கை என்பது மாநில அரசை சார்ந்தது. எனவே புதிய கல்வி கொள்கையில் மாநில அரசு தன்னுடைய உரிமையை நிலைநாட்டுவதற்கு உரிமை உண்டு.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story