மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டம்
x

அடிப்படை வசதிகள் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். அப்போது மண்சட்டி ஏந்தி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்

அடிப்படை வசதிகள் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். அப்போது மண்சட்டி ஏந்தி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அடிப்படை வசதிகள்

சேலம் மாநகராட்சி 26-வது வார்டு சாமிநாதபுரம் பகுதியில் பொது சுகாதார வளாகத்தை பராமரிக்க வேண்டும்,

சாலை, சாக்கடை கால்வாய்களை சீரமைக்க வேண்டும், பெரிய கிணறு தெருவில் செயல்பட்டு வந்த பிறப்பு, இறப்பு அலுவலகத்தை அதே இடத்தில் அமைக்க வேண்டும் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நேற்று நடந்தது.

பரபரப்பு

மாநகர செயலாளர் பிரவீன்குமார் தலைமையில் நிர்வாகிகள் கோட்டை மைதானத்தில் இருந்து ஊர்வலமாக மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் மண்சட்டியை ஏந்தி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அவர்கள் துணை ஆணையர் அசோக்குமாரை சந்தித்து மனு கொடுத்தனர். அப்போது அவர் இந்த கோரிக்கை மனு மீது விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story