கடன் வாங்கியவர்கள் பணத்தை திருப்பி தராததால் ஜவுளி கடை உரிமையாளர் கடலில் குதித்து தற்கொலை


கடன் வாங்கியவர்கள் பணத்தை திருப்பி தராததால் ஜவுளி கடை உரிமையாளர் கடலில் குதித்து தற்கொலை
x
தினத்தந்தி 4 Oct 2023 2:10 AM GMT (Updated: 4 Oct 2023 7:22 AM GMT)

கடன் வாங்கியவர்கள் பணத்தை திருப்பி தராததால் ஜவுளி கடை உரிமையாளர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதிக்கு அருகேயுள்ள அளவாக்கரைவாடியை சேர்ந்தவர் சிவமுனி. இவர் கீழக்கரை பகுதியில் ஜவுளிக்கடை ஒன்றை நடத்தி வந்தார். இதனுடன் அவர் சீட்டு பிடிக்கும் தொழிலும் செய்து வந்துள்ளார். இதில் அவர் தனக்கு தெரிந்தவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை கடன் கொடுத்துள்ளார். கடன் வாங்கியவர்கள் பல மாதங்கள் ஆகியும் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளனர்.

இந்நிலையில் சிவமுனிக்கு கடன் கொடுத்தவர்களும் அவருக்கு நெருக்கடி கொடுத்ததாகவும் தெரியவந்துள்ளது. இதனால் மனம் உடைந்த அவர் தனது ஜவுளி கடையில் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு, கீழக்கரை துறைமுக பகுதியில் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கரை ஒதுங்கிய அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி அவரது உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story