மூதாட்டியின் 16 பவுன் நகை திருட்டு


மூதாட்டியின் 16 பவுன் நகை திருட்டு
x

ஆட்டோவில் பயணம் செய்த மூதாட்டியின் 16 பவுன் நகை திருடப்பட்டது.

மதுரை

மதுரை கருப்பாயூரணி பாரதிபுரம் முதல் தெருவைச்சேர்ந்தவர் சண்முகவள்ளி (வயது 67). சம்பவத்தன்று இவர் ஆட்டோவில் பயணம் செய்தார். பின்னர் பாண்டிகோவில் ரிங் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே இறங்கி பார்த்த போது அவரது பை காணவில்லை. அந்த பையில் 16 பவுன் நகைகள் இருந்தன. அதனை தன்னுடன் பயணம் செய்த யாரோ ஒருவர் தான் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து அவர் அண்ணாநகர் போலீசில் புகார் அளித்தார்.அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Related Tags :
Next Story