விபத்தில் படுகாயம் அடைந்த பெண் சாவு


விபத்தில் படுகாயம் அடைந்த பெண் சாவு
x
தினத்தந்தி 16 Sep 2023 6:45 PM GMT (Updated: 16 Sep 2023 6:45 PM GMT)

புதுக்கடை அருகே விபத்தில் படுகாயம் அடைந்த பெண் சாவு

கன்னியாகுமரி

புதுக்கடை,

புதுக்கடை அருகே உள்ள மணலியை சேர்ந்தவர் தேவராஜ். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்தார். இவருடைய மனைவி ஷீபா (வயது40). இவர்களுக்கு ஒரு மகள் உண்டு. கடந்த 8-ந் தேதி இரவு தேவராஜ் தனது மனைவி, மகளுடன் மோட்டார் சைக்கிளில் ஆலயத்திற்கு புறப்பட்டார். அவர்கள் புதுக்கடையில் உள்ள ஒரு வங்கி அருகில் சாலையை கடக்க முயன்ற போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் தேவராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தேவராஜ் அவருடைய மனைவி, மகள் ஆகியோர் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். அவர்களில் மனைவி ஷீபா தலையில் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் ஷீபா பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story