கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி சாவு


கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி சாவு
x

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

கரூர்

கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள புனவாசி பட்டியை சேர்ந்தவர் அருள் (வயது 41), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி வினோதினி. இந்தநிலையில் அருள் அருகம்பாளையம் அருகே உள்ள தோட்டத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைத்தடுமாறி அருகே உள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு காந்தி கிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அருள் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story