இரும்பு கடையில் ரூ.1½ லட்சம் திருட்டு


இரும்பு கடையில் ரூ.1½ லட்சம் திருட்டு
x

அரூர் அருகே இரும்பு கடையில் ரூ.1½ லட்சம் திருட்டு போனது.

தர்மபுரி

அரூர்

அரூர் அருகே உள்ள எச்.ஈச்சம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விமலநாதன் (வயது 38). இவர் இரும்பு கடை நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு வந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் இரும்பு கம்பிகள் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் கம்பிகளை எடுத்துவர விமலநாதன் கடைக்குள் சென்றார். இரும்பு கம்பிகளை எடுத்து வந்தபோது அந்த நபரை காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விமலநாதன் கடையில் வைக்கப்பட்டிருந்த கல்லாவை திறந்து பார்த்தார். அப்போது அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் திருட்டு போனது தெரிந்தது. இதுகுறிஅத்து விமலநாதன்அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story