பெண்ணிடம் 5 பவுன் தங்கச்சங்கிலி திருட்டு


பெண்ணிடம் 5 பவுன் தங்கச்சங்கிலி திருட்டு
x

கோவிலுக்கு வந்த பெண் பக்தரிடம் தங்கச்சங்கிலியை திருடிய மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோமதி (வயது 54). இவர் நேற்று புரட்டாசி மாதம் சனிக்கிழமை என்பதால் சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள புகழ்பெற்ற பாடலாத்திரி நரசிங்க பெருமாள் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு கோவில் வளாகத்தில் அன்னதானம் வாங்குவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார்.

அன்னதானம் வாங்கிய பிறகு அவர் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி மாயமாகி இருப்பது தெரியவந்தது. இது குறித்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மறைமலைநகர் போலீசாரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்தார். இது குறித்து மறைமலைநகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து கோவிலுக்கு வந்த பெண் பக்தரிடம் தங்கச்சங்கிலியை திருடிய மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கோவில் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.


Next Story