தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை ஆணைய அறிக்கை சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்படும் - அமைச்சர் ரகுபதி


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை ஆணைய அறிக்கை சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்படும் - அமைச்சர் ரகுபதி
x

கோப்புப்படம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை ஆணைய அறிக்கை சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்தி வந்த அருணா ஜெகதீசன் ஆணையம், தனது இறுதி அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். அறிக்கையில் கூறப்பட்டுள்ள அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

விசாரணை ஆணைய அறிக்கை 4 தொகுதிகளாக தரப்பட்டுள்ளதால் தீவிரமாக பரிசீலிக்க வேண்டியுள்ளது என்று கூறிய அமைச்சர் ரகுபதி, அலுவலர்கள் மீதான நடவடிக்கை தொடர்பான விவரங்களுடன் கூடிய ஆணையத்தின் இறுதி அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.


Next Story