வேல்முருகன் எம்எல்ஏவுக்கு மிரட்டல்; தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்கு


வேல்முருகன் எம்எல்ஏவுக்கு மிரட்டல்; தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 11 Oct 2023 6:45 PM GMT (Updated: 11 Oct 2023 6:46 PM GMT)

வேல்முருகன் எம்எல்ஏவுக்கு மிரட்டல் விடுத்த தம்பதி உள்பட 3 பேர் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூர்

பண்ருட்டி,

பண்ருட்டி போலீஸ் லைன் வட கைலாசம் கூட்டுறவு வங்கி அருகே குருலட்சுமி அறக்கட்டளைக்கு சொந்தமான பல கோடி மதிப்புமிக்க 1 ஏக்கர் 80 சென்ட் இடம் இருந்தது. இந்த இடத்தை பண்ருட்டியை சேர்ந்த கணபதி மனைவி பூங்காவனம் என்பவர் அனுபவித்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த மாதம் 19-ந்தேதி சென்னை ஐகோர்ட்டு உத்தரவுபடி மேற்கண்ட இடத்தை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்தியது.

அந்த சமயத்தில் பூங்காவனத்தின் மகன் ராமச்சந்திரன், ராமச்சந்திரனின் மனைவி மற்றும் அன்பு ஆகியோர் ஊடகத்திற்கு பேட்டி அளித்தனர். அப்போது ராமச்சந்திரன் உள்ளிட்ட 3 பேரும் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ.வை களங்கப்படுத்தியும், அவருக்கு மிரட்டல் விடுத்தும் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து வேல்முருகன் எம்.எல்.ஏ.வுக்கு மிரட்டல் விடுத்த ராமச்சந்திரன் உள்ளிட்ட 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேல்முருகன் எம்.எல்.ஏ.வின் உதவியாளர் ராஜசேகர் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் ராமச்சந்திரன், அவரது மனைவி ரேவதி மற்றும் ராமச்சந்திரனின் அண்ணன் அன்பு ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story