கொருக்குப்பேட்டையில் சமையல் கியாஸ் சிலிண்டரை திருடிச் செல்லும் டிப்-டாப் ஆசாமி - கண்காணிப்பு கேமரா காட்சிகள் வைரல்


கொருக்குப்பேட்டையில் சமையல் கியாஸ் சிலிண்டரை திருடிச் செல்லும் டிப்-டாப் ஆசாமி - கண்காணிப்பு கேமரா காட்சிகள் வைரல்
x
தினத்தந்தி 6 Aug 2023 3:20 AM GMT (Updated: 6 Aug 2023 5:24 AM GMT)

கொருக்குப்பேட்டை சாலையில் மோட்டார் சைக்கிளில் வரும் டிப்-டாப் ஆசாமி ஒருவர் சமையல் கியாஸ் சிலிண்டரை திருடிச் செல்லும் சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை

தமிழகத்தில் வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் ரூ.1,100-க்கும் அதிகமான விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொருக்குப்பேட்டை சாலையில் மோட்டார் சைக்கிளில் வரும் டிப்-டாப் ஆசாமி ஒருவர் சமையல் கியாஸ் சிலிண்டரை திருடிச் செல்லும் சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோ காட்சியில், கொருக்குப்பேட்டை ஆர்.கே.நகரில் ஒரு வீட்டுக்கு சமையல் கியாஸ் சிலிண்டர் டெலிவரி செய்வதற்காக ஊழியர் ஒருவர் ரிக் ஷாவை சாலையில் நிறுத்திவிட்டு செல்கிறார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் அங்கிருந்த வண்டியில் இருந்த சமையல் கியாஸ் சிலிண்டரை எடுத்து மோட்டார் சைக்கிளில் வைத்து கொண்டு சிட்டாக பறந்து செல்வது போன்ற காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய நிலையில், சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

ஏற்கனவே சிலிண்டர் விலை அதிகரித்து வரும் நிலையில், இந்த பகுதியில் இதுவரை 4 சிலிண்டர்கள் திருட்டு போய் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story