திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.2½ கோடி


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.2½ கோடி
x

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.2½ கோடி கிடைத்துள்ளது.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் உண்டியல் மாதம் இரண்டு முறை எண்ணப்படும். இந்த மாதம் முதல் முறையாக இன்று கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது.

கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் தலைமையில், இணை ஆணையர்(பொறுப்பு) அன்புமணி, அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், செந்தில் முருகன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் பணம் எண்ணப்பட்டது. இதில், தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர், ஆய்வர்கள் செந்தில்நாயகி, சண்முகராஜா, பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, கருப்பன் மற்றும் சிவகாசி பதினெண் சித்தர் மடம் குருகுல வேதபாடசாலை உழவாரபணி குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுப்பட்டனர்.

இதில் ரூ.2 கோடியே 47 லட்சத்து 4 ஆயிரத்து 806 கிடைத்துள்ளது. மேலும் தங்கம் 2 கிலோ 225 கிராமும், வெள்ளி 15¼ கிலோவும், வெளிநாட்டு பணம் 426-ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.


Next Story