தமிழகத்தில் 449 பேருக்கு கொரோனா- ஒருவர் உயிரிழப்பு


தமிழகத்தில் 449 பேருக்கு கொரோனா- ஒருவர் உயிரிழப்பு
x

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பரவலாக குறைந்துள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் 449 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று 449 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 79 பேர், கோவையில் 58 பேர் உள்பட 36 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. பெரம்பலூர் மற்றும் ராமநாதபுரத்தில் பாதிப்பு இல்லை. மருத்துவமனையில் 352 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று கொரோனாவால் காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த 42 வயதுடையவர் உயிரிழந்துள்ளார். அந்தவகையில் கடந்த 12 நாட்களில் தமிழகத்தில் இது 3-வது உயிரிழப்பாகும். கொரோனா பாதிப்புக்குள்ளாகி 4 ஆயிரத்து 960 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story