தமிழகத்தில் இன்று 445 பேருக்கு கொரோனா; ஒருவர் உயிரிழப்பு


தமிழகத்தில் இன்று 445 பேருக்கு கொரோனா;  ஒருவர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 7 Sep 2022 3:03 PM GMT (Updated: 7 Sep 2022 3:04 PM GMT)

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 445- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று 445 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 81 பேர், கோவையில் 59 பேர் உள்பட 36 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மற்றும் புதுக்கோட்டையில் பாதிப்பு இல்லை.

மருத்துவமனையில் 359 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று கொரோனாவால் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 52 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா பாதிப்புக்குள்ளாகி 4 ஆயிரத்து 945 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story