இஸ்ரேல்-பாலஸ்தீன போரை நிறுத்தக்கோரி மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு ஆர்ப்பாட்டம்


இஸ்ரேல்-பாலஸ்தீன போரை நிறுத்தக்கோரி மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு ஆர்ப்பாட்டம்
x

இஸ்ரேல்-பாலஸ்தீன போரை தடுத்து நிறுத்த வலியுறுத்தி குளச்சலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி

குளச்சல்,

இஸ்ரேல்-பாலஸ்தீன போரை ஐ.நா.சபை பிரதிநிதிகள் தடுத்து நிறுத்த வலியுறுத்தி குளச்சலில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு (ரெட் ஸ்டார்) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட குழு உறுப்பினர் மேரி ஸ்டெல்லா தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் தனபால், லாயம் சுசீலா, கலா, பரமேஸ்வரன், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வக்கீல் பால்ராஜ் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார். இதில் நிர்வாகிகள் ஜார்ஜ் ஸ்டீபன், ஆதித்த மார்த்தாண்டன், தங்கப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story