சாதி கலவரம் ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும் : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்


சாதி கலவரம் ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும் : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
x

எந்த சூழ்நிலையிலும் சாதிக் கலவரங்கள் ஏற்படாதவாறு கண்காணிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

சேலம்,

"கள ஆய்வில் முதல்-அமைச்சர்" என்ற புதிய திட்டத்தின் கீழ், ஆய்வுப் பணிகளை சேலம் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். அதன்படி சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து இன்று மாலை அவர் ஆய்வு மேற்கொண்டார்.

இதன்படி சேலம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கு நிலவரம், குற்ற நிகழ்வுகளை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

சுமார் மூன்று மணி நேரம் வரை நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பின்னர் காவல் துறையினர் இடையே உரையாற்றிய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், காவல்துறையினர் போதைப் பொருட்களை அழிக்க முக்கியத்துவம் அளிக்க வேண்டும். போதைப் பொருட்கள் கடத்தல் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போதைப்பொருட்கள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது. பொதுமக்கள், வணிகர்களிடையே போதுமான விழிப்புணர்வை காவல்துறையினர் ஏற்படுத்த வேண்டும். மேலும், எந்த சூழ்நிலையிலும் சாதிக் கலவரங்கள் ஏற்படாதவாறு கண்காணிக்க வேண்டும். குற்றச்சம்பங்களை தடுக்க காவல்துறையினர், வருவாய்த்துறையினர் இணைந்து செயல்பட வேண்டும். நம் பணி மக்களுக்கானது என்ற ஒரே இலக்கை உணர வேண்டும்" என்று அவர் கூறினார்.


Next Story