புகையிலை பொருட்கள் விற்றவர் கைது


புகையிலை  பொருட்கள் விற்றவர் கைது
x
தினத்தந்தி 30 Aug 2023 12:15 AM IST (Updated: 30 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே வடியாங்குப்பம் கிராமத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் திடீரென சோதனை நடத்தினர். அப்போது அந்த கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிந்தது. இதையடுத்து அங்கிருந்த புகையிலைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக ஜெயமணி (வயது 39)என்பவரை கைது செய்தனர்.

1 More update

Next Story