புகையிலை பொருட்கள் விற்றவர் கைது


புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
x

புகையிலை பொருட்கள் விற்றவர் செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள டி.கே. மண்டபம் கிராமத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்படி டி.கே.மண்டபம் பகுதியில் திருக்கோவிலூர் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அல்லாபக்ஷ் (வயது 45) என்பவர் நடத்தி் வரும் பெட்டிக்கடையில் போலீசார் சோதனை செய்தபோது அங்கு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிந்தது. இது தொடர்பாக அல்லாபக்ஷ் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரிடம் இருந்த புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

1 More update

Next Story