கரூரில் தக்காளி கிலோ ரூ.160-க்கு விற்பனை


கரூரில் தக்காளி கிலோ ரூ.160-க்கு விற்பனை
x

கரூரில் தக்காளி கிலோ ரூ.160-க்கு விற்பனையானதால் இல்லத்தரசிகள் கவலையில் உள்ளனர்.

கரூர்

கிலோ ரூ.160-க்கு விற்பனை

காய்கறி விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவு காரணமாக அதன் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. கடந்த மாதத்தில் ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி, இந்த மாத தொடக்கத்தில் ரூ.100 வரை கரூரில் விற்பனை செய்யப்பட்டது.

நாளடைவில் தக்காளி விலை குறையும் என்ற எதிர்பார்த்த பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி வருகிறது. நேற்று கரூர் உழவர் சந்தையில் தக்காளி கிலோ ரூ.140-க்கும், தினசரி காய்கறி மார்க்கெட்டில் கிேலா ரூ.160-க்கும் விற்பனையானது.

கோரிக்கை

தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் இல்லத்தரசிகள் கவலையில் உள்ளனர். ஓட்டல்களில் தக்காளி சாதம், தக்காளி சட்னி, தக்காளி சூப் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

தக்காளி விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story