ரோட்டில் டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பலி


ரோட்டில் டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பலி
x

கடம்பூர் அருகே ரோட்டில் டிராக்டா் கவிழ்ந்ததில் வாலிபர் பலி ஆனார். 2 பேர் உயிர் தப்பினர்.

ஈரோடு

டி.என்.பாளையம்

கடம்பூர் அருகே ரோட்டில் டிராக்டா் கவிழ்ந்ததில் வாலிபர் பலி ஆனார். 2 பேர் உயிர் தப்பினர்.

தொழிலாளி

கடம்பூர் அருகே உள்ள சின்ன சாலட்டியை சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் வேலுமணி (வயது 21). தொழிலாளி.

நேற்று காலை கடம்பூரில் இருந்து கே.என்.பாளையத்துக்கு டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. டிராக்டரை கடம்பூரை சேர்ந்த முருகேசன் என்பவர் ஓட்டி சென்றார். டிராக்டரில் வேலுமணி மற்றும் கடம்பூரை சேர்ந்த கார்த்தி ஆகியோரும் சென்றனர். கடம்பூரை அடுத்த போன்பாறை என்ற இடத்தின் அருகே சென்றபோது டிராக்டரின் மெயின் ஆக்சில் கட்டானதாக கூறப்படுகிறது. இதனால் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சாவு

அப்போது டிராக்டரில் இருந்து முருகேசன், கார்த்தி ஆகியோர் குதித்து உயிர் தப்பினர். ஆனால் வேலுமணி குதித்து உயிர் தப்பிக்க முயன்றபோது அவர் மீது டிராக்டர் கவிழ்ந்தது. இதில் அவர் டிராக்டர் அடியில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி அறிந்ததும் கடம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வேலுமணியின் உடலை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Related Tags :
Next Story