மெட்ரோ ரெயில்வே பணிகளுக்காக மேடவாக்கம் செம்மொழி சாலையில் போக்குவரத்து மாற்றம்


மெட்ரோ ரெயில்வே பணிகளுக்காக மேடவாக்கம் செம்மொழி சாலையில் போக்குவரத்து மாற்றம்
x

சென்னை மெட்ரோ ரெயில் 5-ம் கட்ட விரிவாக்கத்திற்கான கட்டுமான பணிகள் மேடவாக்கம், சோழிங்கநல்லூர் இடையே செம்மொழிச் சாலையில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளுக்காக செம்மொழி சாலையில் டிஜிட்டல் மார்ட் அருகே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தாம்பரம் மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை

தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து மேடவாக்கம் செம்மொழிச் சாலை வழியாக பெரும்பாக்கம் நோக்கி செல்லும் வாகனங்கள், தற்போது பள்ளிக்கரணை போலீஸ் நிலைய சந்திப்பு வழியாக செல்கின்றன. இதில் எவ்வித மாற்றமும் இல்லை. ஆனால் பெரும்பாக்கம் செம்மொழிச் சாலையில் இருந்து வேளச்சேரி பிரதான சாலை நோக்கி செல்லும் வாகனங்கள் டிஜிட்டல் மார்ட்டில் இருந்து பள்ளிக்கரணை போலீஸ் நிலையம் செல்ல அனுமதி இல்லை. மாறாக அனைத்து வாகனங்களும் டிஜிட்டல் மார்ட் சந்திப்பில் இடது புறம் திரும்பி ராதா நகர் பிரதான சாலை, மாம்பாக்கம் சாலை வழியாக மேடவாக்கம்-மாம்பாக்கம் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story