திருவள்ளூர் அருகே சிக்னல் கோளாறால் 2 மணிநேரம் ரெயில் சேவை பாதிப்பு - பயணிகள் கடும் அவதி


திருவள்ளூர் அருகே சிக்னல் கோளாறால் 2 மணிநேரம் ரெயில் சேவை பாதிப்பு - பயணிகள் கடும் அவதி
x

திருவள்ளூர் அருகே சிக்னல் கோளாறால் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் 2 மணிநேரம் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

சென்னை

திருவள்ளூர் அடுத்த திருவாலங்காடு மற்றும் மோசூர் ரெயில் நிலையத்துக்கு இடையே நேற்று காலை 7 மணியளவில் சிக்னல் கோளாறு ஏற்பட்டது.

இதன் காரணமாக அரக்கோணம் வழித்தடத்தில் வந்த கோவை எக்ஸ்பிரஸ் ரெயில், திருப்பதி சென்ற சப்தகிரி எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் மின்சார ரெயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.

ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் தனியார் நிறுவன ஊழியர்கள், மற்றும் அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் என அனைவரும் குறிப்பிட்ட நேரத்துக்கு பணிக்கு செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்தனர். நடுவழியில் ரெயில்கள் நின்றதால் பயணிகள் சிலர் தண்டவாளத்தில் இறங்கி தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு ஆட்டோ, பஸ் மூலம் சென்றனர்.

இந்த சிக்னல் கோளாறால் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக ரெயில் சேவை பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த ரெயில்வே ஊழியர்கள் சிக்னல் கோளாறை சரி செய்தனர். அதன்பிறகு ரெயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டு சென்றன.


Next Story