3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு


3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
x

3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழக உள்துறை செயலாளர் பனிந்தீர ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

* லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜி பவானீஸ்வரி, லஞ்ச ஒழிப்புத் துறை இணை இயக்குநராக நியமனம் செய்யப்படுகிறார்.

* சென்னை அமல்படுத்துதல் பிரிவு ஐஜி துரை குமார், லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜியாக நியமிக்கப்படுகிறார்.

* கட்டாய காத்திருப்புப் பட்டியலில் இருந்த வந்திதா பாண்டே, புதுக்கோட்டை எஸ்.பி.-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story