காஞ்சீபுரம் சரகத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் - டி.ஐ.ஜி. உத்தரவு


காஞ்சீபுரம் சரகத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் - டி.ஐ.ஜி. உத்தரவு
x

காஞ்சீபுரம் சரகத்திற்கு உட்பட்ட காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை டி.ஐ.ஜி. பொன்னி பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

காஞ்சிபுரம்

அதன்படி காத்திருப்போர் பட்டியலில் இருந்த அமிர்தலிங்கம் செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு போலீஸ் இன்பெக்டராகவும், பிரபாகர், வாலாஜாபாத் போலீஸ் இன்பெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தீவிர குற்றத்தடுப்பு பிரிவில் பணியாற்றிய வெற்றிச்செல்வன், விஷ்ணுகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், பாலுசெட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பாலமுருகன், காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் பணியாற்றிய நிவாசன் பாலுசெட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பேசில் பிரேம் ஆனந்த் நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கும், வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஜெயவேல், தீவிர குற்ற தடுப்பு பிரிவுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


Next Story